பொன்சேகாவை சூழ அணிதிரளவுள்ள சிறிலங்கா இராணுவம்
SJB
Sajith Premadasa
Sarath Fonseka
By Jaso
நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தாம் அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால், அனைத்து இராணுவமும் தம்மைச் சுற்றி திரளும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தன்னை அதிபர் வேட்பாளராக நியமித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று கூறும் அவர் வெற்றி பெறுவது மட்டுமன்றி நாட்டையும் கட்டியெழுப்புவேன் என்று குறிப்பிட்டார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் அதிபர் வேட்பாளரை
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வருடத்திற்கு முன்னர் அதிபர் வேட்பாளரை முன்னிறுத்தக் கூடாது எனவும், இன்னும் ஒரு வருடத்தில் மக்களின் மனம் எவ்வாறு மாறும் என்பதை அறியாமல் வேட்பாளரை நியமிப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் தொலைக்காட்சி ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.