யாழில் அதிகாலைவேளை திருட்டுக் கும்பல் கைரிசை - வைரலாகும் காணொளி
யாழில் திருட்டு
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து இருவர் பெட்ரோலை களவாடியுள்ளனர்.
குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காலையில் வீட்டார் எழுந்து மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, மோட்டார் சைக்கிள் இயங்காத நிலையிலையே பெட்ரோல் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
வைரலாகும் காணொளி
அதன் பின்னர் வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடிக்கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தனது வீட்டினுள் புகுந்து பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் காணொளி காட்சியினை சமூக வலைத்தளங்களில் வீட்டின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.