பாதுகாப்பு ஊழியர் கடமையில் இருந்தபோது இடம்பெற்ற திருட்டு: மானிப்பாய் பிரதேச சபையில் சம்பவம்
Sri Lankan Tamils
Jaffna
By Kajinthan
மானிப்பாய் பிரதேச சபையின் காணியில் இருந்த பெறுமதி மிக்க இரும்பு படலையானது நேற்றையதினம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குறித்த காணியானது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
திருடப்பட்ட படலை
இந்நிலையில் அந்த காணியில் பகல் மற்றும் இரவு வேளை என 24 மணிநேரமும் பாதுகாப்பு ஊழியர்கள் அந்த காணியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றையதினம் அந்த படலையானது திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதேச சபையின் உயர்மட்டத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பிரதேச சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்