தொடரும் விசாரணை : இஷாராவின் வங்கிக் கணக்கு தொடர்பில் வெளியான தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியிடம், மேற்கொண்ட விசாரணைகளில் வெளிவந்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள்
அத்துடன் தனக்கு உந்துருளி மற்றும் சிற்றூர்ந்து போன்ற வாகனங்களை செலுத்த முடியும் என்பதை, இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவின் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை நேபாளத்தில் கடந்த 14ஆம் திகதி கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்ற நிலையில் மற்றைய இருவரும் பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
