பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம்

Sri Lanka Police Nuwara Eliya
By Sumithiran Sep 02, 2024 07:42 PM GMT
Report

அம்பேவெல பிரதேசத்தில் அரச காணியை வழங்காததற்கு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்கவின்(Niluka Ekanayake) கணவர் நேற்று (01) காலை நுவரெலியா காவல்துறை தலைமையகத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

 நிலுகா ஏகநாயக்க மத்திய மாகாண ஆளுநராக இருந்த காலத்தில், அவரும் அவரது கணவரும் நுவரெலியாவில்(nuwara eliya) உள்ள கிரிகோரி ஏரிக்கு அருகில் உள்ள அரச காணியைப் பயன்படுத்தினர், பின்னர் அந்த நிலத்தை நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் மேயராக இருந்த வர்த்தகர் ஒருவருக்கு விற்றுள்ளனர்.

காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக உரிமை இல்லை 

அந்த காணிக்குப் பதிலாக, நுவரெலியா அம்பேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியை அபிவிருத்திக்காக வழங்குமாறு முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா பிரதேச செயலாளர் டி.ஏ.பி. தனசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த காணியை வழங்குவதற்கு சட்டரீதியாக தமக்கு உரிமை இல்லை என பிரதேச செயலாளர், முன்னாள் ஆளுநரின் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம் | Threatened The Nuwara Eliya Divisional Secretary

இச்சம்பவத்தின் பின்னர் குறித்த காணியை வழங்காவிடின் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை பார்த்துக்கொள்வோம் என அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பிரதேச செயலாளர் நுவரெலியா தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைப்பு : குறிக்கப்பட்டது திகதி

நாடாளுமன்றம் கலைப்பு : குறிக்கப்பட்டது திகதி

கணவரை மன்னிக்குமாறு கேட்ட முன்னாள் ஆளுநர்

இதேவேளை, மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் நிலுகா ஏகநாயக்க, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு அளிக்குமாறும் தனது கணவரை மன்னிக்குமாறும் கேட்டுள்ளார்.

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய முன்னாள் ஆளுநரின் கணவர் : பின்னர் நடந்த சம்பவம் | Threatened The Nuwara Eliya Divisional Secretary

மேலும் இச்சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்கத் தயார் என அவரது கணவரும் பிரதேச செயலாளரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். அதன்படி முன்னாள் ஆளுநரின் கணவர் நுவரெலியா காவல்நிலையத்திற்கு வந்து பிரதேச செயலாளரிடம் மன்னிப்பு கோரினார். மேலும் தொலைபேசி அழைப்பை எடுக்கும்போது தான் குடிபோதையில் இருந்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார்.

இனிமேலும் இவ்வாறு மிரட்டமாட்டேன் என காவல்துறை புத்தகத்தில் எழுதிவிட்டு பிரதேச செயலாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

பிரான்சில் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து

நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பை விடுத்த சம்பவம் தொடர்பில் இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமை (30) காவல்துறை மா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024