யாழில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் சிக்கிய மூவர்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சென்ற பாரவூர்தி ஒன்றினை நேற்று (30) காவல்துறை விசேட அதிரடி படையினருடன் இணைந்து மறித்து சோதனையிட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வாகனத்தினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவற்றினை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் வாகனத்தில் பயணித்த மூவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறை விசேட அதிரடி படையினர் , மீட்கப்பட்ட கஞ்சா , கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
