இலங்கையில் எதிரொலிக்கும் மத்திய கிழக்கு மோதல்கள்! நியமிக்கப்பட்ட முக்கிய குழுக்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாடு சந்திக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குழுக்களின் பணிகள்
மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் சேவைகளும் தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், அந்தப் பணிகளை நிர்வகிப்பதற்கும் ஒரு குழுவும், அரச சேவைகளைப் பராமரிப்பது தொடர்பான சேவைகளை நிர்வகிப்பதற்கு மற்றொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிண தெரிவித்துள்ளார்.

மேலும், வலுச்சக்தி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |