வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர் உயிரிழப்பு...! 3 சிறைக்காவலர்கள் கைது
வெலிக்கடை சிறைச்சாலையில் மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் பொரளை காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்புரவுப் பணிகள்
குறித்த விடயத்தைக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த கைதி கடந்த மூன்றாம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன் அதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து குறித்த கைதி திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள்
இந்தநிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அவரைத் தாக்கியுள்ளதாக உயிரிழந்த கைதியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனடிப்படையில், இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொரளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 20 மணி நேரம் முன்