ஒரே குடும்பத்தில் ஒரேநேரத்தில் மூவருக்கு அடித்த அதிஷ்டம் - எல்லையில்லா மகிழ்ச்சியில் அவர்கள்
அதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு வரும் என்று சொல்வார்கள் . அப்படி ஒரு அதிஷ்டம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு ஒரே நாளில் ஒரே நேரத்தில் அடித்துள்ளது என்றால் அவர்கள் சந்தோஷத்தில் மகிழ்ச்சி எப்படி தாண்டவமாடும்.
ஆம் அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு நிகழ்ந்துள்ளது.
அதிஷ்டக் குலுக்கல்களில் வெற்றி
மேரிலாந்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், மேரிலாண்ட் லொட்டரியில் அதிஷ்டக் குலுக்கல்களில் வெற்றி பெற்றுள்ளனர், இது மிகவும் வினோதமானது, நம்புவது கடினம். ஒரே டிராவில் வெற்றி பெற்ற மூவருக்கும் தலா ரூ.41 லட்சம் (இந்திய ரூபாய்) ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மேரிலேண்ட் லொட்டரியின்படி,ஒக்டோபர் 13 அன்று 61 வயது தந்தை ஹாம்ப்ஸ்டெட்டில் ரூ.82 டிக்கெட்டை வாங்கினார். அதன் பிறகு, அவரது 31 வயது மகன் மற்றும் 28 வயது மகள் இருவரும் ஒரே குலுக்கலுக்கு ஒரே கடையில் டிக்கெட் வாங்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்ற இருவரும் டிக்கெட் வாங்கியிருப்பது தெரியாது.
இன்னும் சுவாரசியமாக, குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களும் ஒரே மாதிரியான எண்களைப் பயன்படுத்தினர். அது வெற்றி எண்ணாக மாறியது.
நம்ப முடியாத அதிஷ்டம்
லொட்டரி அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர்கள் அனைவரும் ரொக்கப் பரிசுகளை வென்றதை உணர்ந்தபோது, அவர்களது அதிர்ஷ்டத்தை குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை.
இந்நிலையில், வெற்றியாளர்களில் ஒருவர் தனது பரிசுத்தொகையை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார், மற்ற இருவரும் புதிய வீட்டை வாங்குவதற்கு அதைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்று லொட்டரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.