புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்!
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே குறித்த நற்சான்றுப் பத்திரங்களை கையளித்துள்ளதாக அரச தலைவர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக காலித் நசார் சுலைமான் அல் அமெரி (Khaled Nasser Sulaiman Al Ameri), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜூலி ஜியோன் சுங் (Julie Jiyoon Chung) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கைக்கான லிபியா தூதுவராக நாசர் அல்ஃபுர்ஜானி (Nasser Alfurjani) நியமிக்கப்பட்டுள்ளார்.
பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத் மற்றும் பிரதான கூட்டமைப்பு அதிகாரி செனரத் திஸாநாயக்க ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.