ஈரானுடனான மோதல் அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு
ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் தமது தரப்பில் மூன்று படைவீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது, இது ஈரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் அமெரிக்காவின் முதல் உயிரிழப்பு ஆகும்.
ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மூவர் பலி ஐவர் படுகாயம்
இந்த நடவடிக்கையில் மூன்று அமெரிக்க படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் "கடுமையாக காயமடைந்ததாகவும்" அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இறந்த வீரர்களின் அடையாளங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் அமெரிக்க இராணுவ மரபின்படி, அவர்களின் குடும்பங்களுக்கு அறிவித்த 24 மணி நேரத்திற்குப் பிறகு அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான இந்த நடவடிக்கையை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "அமெரிக்க ஹீரோக்கள் தங்கள் உயிர்களை இழக்க நேரிடும், மேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் போரில் இயல்பானவை" என்று முன்னர் எச்சரித்திருந்தார்.

இந்த இறப்புகள் பற்றிய தகவல்கள் வெளியானவுடன், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |