இரகசிய நோக்கங்களுடன் மூவர் - வெளிவந்த குற்றச்சாட்டு
wimal weerawansa
hirunika
udaya gammanpila
wasudeva nanayakara
By Sumithiran
ராஜபக்ச குடும்பத்தின் இன்னொரு உறுப்பினர் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்ய விமல்வவீரவன்ச, உதயகம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் முயல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விமல்வவீரவன்ச உதயகம்மன்பில வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் நடவடிக்கைகளின் பின்னால் இரகசிய நோக்கங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மூவரினதும் கடந்தகாலங்களை ஆராயும்போது அவர்கள் மக்கள் தங்களிற்கு வழங்கிய ஆணையை காப்பாற்ற முயல்கின்றனர். நிதியமைச்சருக்கு எதிரான இன்னொரு உறுப்பினருக்கு உதவ முயல்கின்றனர் என்பது தெளிவாகின்றது என ஹிருணிகா மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி