உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி..! வெகுவிரைவில் வெளிவரும் உண்மை: ரில்வின் சில்வா
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) நேற்று நடைபெற்ற 55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள்.
சுகபோகமாக வாழும் மனநிலை
பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையாக செயற்படவேண்டும். அனைவரும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள்.
இன்று தூய்மையானவர்களை போன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஒரு குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் தௌpவாக அறிவித்துள்ளது.
இதன் பின்னரும் அவர்கள் ஊழல் பற்றி பேசுவது ஆச்சியரியமாக உள்ளது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதில் சுகபோகமாக வாழும் மனநிலை அரசாங்கத்தில் எவருக்கும் இல்லை. ஏனெனில் இது மக்களாட்சி அரசாங்கம்.
பிரதான சூத்திரதாரிகள்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பிரதான சூத்திரதாரிகள், பிரதான சூத்திரதாரி யார்? என்பது பற்றி நூல் வெளியிடுகிறார்கள்.

நூல் வெளியீட்டு நிகழ்வுக்குப் பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். உண்மை வெகு விரைவில் வெளிவரும். ஆகவே கலக்கமடையத் தேவையில்லை.
அரசாங்கத்தின் மீது திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு நாங்கள் ஒருபோதும் பலவீனமடையமாட்டோம்.
ஏனெனில் பல ஆண்டுகாலமாக நாங்கள் இவ்வாறான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். ஆகவே விமர்சனங்களால் அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். நாட்டின் அடிப்படை பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு பெற்றுக்கொடுப்போம் - என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |