கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவக் கழிவுகளை அகற்ற இரா.சாணக்கியன் ஆலோசனை! (படங்கள்)
கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையான டைனமைட் மீன்பிடி முறை காரணமாக கடல்வளம் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும், கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவக் கழிவுகள் உள்ளடங்கலான கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இதற்கான உபகரணம் தற்போது காத்தான்குடி நகர சபையில் மாத்திரமே காணப்படுகின்றது. எனவே இதனை வடக்கு, கிழக்கிலுள்ள பிரதேச சபைகளுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன், இல்மனைட் அகழ்விற்கான அனுமதியினை கடல்சார் திணைக்களங்களிடமும் பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.




