ரணிலுடன் பேசப்பட்டது என்ன..! சாணக்கியன் வெளியிட்ட தகவல் (காணொளி)
ரணிலுடன் பேசப்பட்டது என்ன?
அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தேசிய மட்டத்திலேயே செய்யப்பட இருக்கின்ற வேலைத் திட்டத்திற்கு, அதனை தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவளிப்பதாக கூறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செல்வி ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்தச் சந்திப்பு தமிழர் தரப்புக்கு எத்தகைய நன்மைகளை கொடுக்கும்
“தேசிய மட்டத் திட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அதில் தமிழர்களுடைய விடயங்களும் உள்ளடக்கப்படப்படும்.
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழர் பிரதிநிதிகளாகிய நாம் இந்த விடயங்களை கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும்” என்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்டது என்ன? இந்தச் சந்திப்பு தமிழர் தரப்புக்கு எத்தகைய நன்மைகளை கொடுக்கும், அதில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,