தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,811.66 அமெரிக்க டொலர் ஆக பதிவு செய்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (08) ஒரு பவுணுக்கு 7,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வெள்ளியின் விலை
நேற்றைய தினம் 398,000 ரூபாயாகக் காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை, இன்றைய உயர்வுடன் 4 இலட்சம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,575 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |