வடக்கு பாதையில் பயணிக்கும் 2 தொடருந்து சேவைகள் இரத்து
வடக்கு தொடருந்து பாதையில் பயணிக்கும் இரண்டு தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (09) இந்த தொடருந்து சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணேவத்த மற்றும் வெல்லாவ இடையேயான சாலையில் உள்ள ஒரு பாலத்தில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக இவ்வாறு சேவை இரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடருந்து சேவை
குருநாகல் தொடருந்து நிலையத்திலிருந்து இன்று (09) காலை 8.20 மணிக்கு மஹாவ சந்திக்கு புறப்படும் தொடருந்து மற்றும் மஹாவ சந்திக்கு தொடருந்து நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் தொடருந்து இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பிலிருந்து (Colombo) மட்டக்களப்பிற்கான (Batticaloa) தொடருந்து சேவையில் கடந்த (07.03.2025) முதல் புதிய நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்