நாட்டில் நாளைய தினம் ஏற்படுத்தப்படவுள்ள மின்துண்டிப்பு!
sri lanka
tomorrow
power cut
pucsl
By Thavathevan
இலங்கையில் நாளைய தினம்(23) மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான தகவலை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களிற்கு காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணிவரை 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,
மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களில் காலை 10.30 தொடக்கம் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும்,
மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி