நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு!
நாட்டில் நாளைய தினம்(28) மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 08 மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும்,
மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேபோன்று P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் 02 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,
மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும், மின்வெட்டு ஏற்படுத்தப்படவுள்ளது.
