இம்மாதம் முதல் பத்து நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் -முதலிடம் பிடித்தது இந்தியா
இந்த மாதம் (ஓகஸ்ட் 2023) முதல் பத்து (10) நாட்களுக்குள் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சின் தகவலின்படி, இந்த பத்து நாட்களில் மொத்தம் 51, 594 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அதிகரித்த தொகையாகும்.
முதலிடத்தில் இந்தியா

9,146 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது., 6,939 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்திலும், 3,707 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் சீனா மூன்றாமிடத்திலும் உள்ளது.
ஓகஸ்ட் 2023 இன் முதல் 10 நாட்களில் 3,249 சுற்றுலாப் பயணிகளுடன் பிரான்ஸ் மற்றும் 3,155 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஜெர்மனி ஆகிய நாடுகள் நான்காம் ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன.
வருடத்தில் இதுவரை வந்த சுற்றுலா பயணிகள்

இந்த காலகட்டத்தில் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
இந்த வருடத்தின் ஓகஸ்ட் 10, 2023 வரை இலங்கைக்கு மொத்தம் 819, 507 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
