பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
2025 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 115,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த விடயத்தினை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 367, 804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
அத்துடன் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி இந்தியாவிலிருந்து (India) 16,016 சுற்றுலாப் பயணிகளும் ரஷ்யாவிலிருந்து (Russia) 14,315 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் பிரித்தானியாவிலிருந்து (United Kingdom) 12,925 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனியிலிருந்து (Germany) 8,230 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
