இனி மேலிருந்து கண்காணிக்கப்படும்? காவல்துறையினருடன் இணைந்த விமானப்படை (காணொளி)
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெல் 212 ரக விமானங்கள் மற்றும் ட்ரோன் பயன்படுத்தி சிறிலங்கா காவல்துறையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளாதக விமானப்படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க (Dushan Wijesinghe) தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிருத்துள்ளார்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் நிலைமையை கண்காணிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரையின் பேரில், பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று கொழும்பு பிரதேசம் முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய களனி தியத உயன, பஞ்சிகாவத்தை, ஆயுர்வேத சுற்றுவட்டம், லோட்டஸ் சுற்றுவட்டம் மற்றும் நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,