தளத்தப்பட்டது ராஜித சேனரத்ன மீதான பயணத்தடை! நீதிமன்றம் உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனரத்ன மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாகத் தளர்த்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜித சேனரத்னவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த கோரிக்கை, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மருத்துவ சிகிச்சை
அதன்போது, தனது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக சந்தேக நபரின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர் மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாகத் தளர்த்துமாறு அந்த சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை கருத்தில் கொண்ட பிரதான நீதவான், சந்தேக நபர் மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை தற்காலிகமாகத் தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |