திருமலை கடற்றொழிலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் இன்று (20) காலை குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை ஒடுக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்
மனுவைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் திருகோணமலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காகக் ரத்ன கமகே குரல் கொடுத்தார்.

தற்போது அவர் இந்த அரசாங்கத்தின் மீன்பிடி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள போதிலும், அவர் திருகோணமலைப் பக்கமே தலைவைத்துப் பார்ப்பதில்லை.
பல வருட காலமாகத் நாம் எதிர்கொண்டு வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகள் நன்கு அறிந்திருந்தும், அவை தொடர்பாக எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்துப் பேசுவதற்குத் நாம் முற்படும் போதெல்லாம், 'உங்களது பிரச்சினைகள் பற்றி எமக்கு நன்கு தெரியும்' எனக் கூறி அரசியல் தலைமைகள் எங்களை அமரச்செய்து விடுகின்றனர்.

எமது குரல் அங்கே ஒடுக்கப்படுகிறது. அரசியல் தலைமைகளின் இத்தகைய அணுகுமுறையினால் எங்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்ச்சியாகப் பாராமுகமாகவே காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே மாற்று வழியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி இன்று முறைப்பாடு செய்துள்ளோம்.
இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு, எமக்கான நீதியையும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் பெற்றுத்தருமாறு கோருகின்றோம்“ என தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்