நாவச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் தீக்கிரை!
Trincomalee
Sri Lanka
Fire
By H. A. Roshan
திருகோணமலையில் தனியார் ஹோட்டல் ஒன்று தீவிபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (20-04-2023) இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி பிரதான வீதியின் நாவச்சோலை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
தீயை பொதுமக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த ஹோட்டல் மேல் பகுதி அழகுபடுத்தலுக்காக ஓலையாலும் வேயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி