காசா மீதான இஸ்ரேலின் உச்சக்கட்ட தாக்குதல்: ஆதரவு தெரிவித்த ட்ரம்ப்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது.
தீவிர முயற்சி
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தற்போது, போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், ஹமாஸ் தரப்பினர் போர் நிறுத்த விதிகளை மீறியதாக தெரிவித்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு பிறப்பித்தார்.
பாதுகாப்பு படையினர்
இதனடிப்படையில், காசாவில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், நெதன்யாகுவின் நடவடிக்கையை டொனால்ட் ட்ரம்ப் ஆதரித்துள்ளார்.
இஸ்ரேல் படையினர்
இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஹமாஸ் அமைப்பினர் ஒரு இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கொன்றார்கள்.

எனவே இஸ்ரேல் படையினர் திருப்பித் தாக்கினர், அவர்கள் திருப்பித் தாக்க வேண்டும்.
ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும், இந்த தாக்குதல் நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதுவும் பாதிக்காது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
22 மணி நேரம் முன்