உக்ரைன் - ரஷ்யா போரில் ட்ரம்ப்புக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய சவால்...!
உலகளவில் எட்டுப் போர்களைச் சுலபமாக முடித்த தனக்கு, ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிப்பது பெரும் சிரமமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா உட்பட எட்டுப் போர்களை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்துவருகின்றார்.
இதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து வந்தார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் : காவல்துறை மா அதிபர் அதிர்ச்சி தகவல்
அமெரிக்கத் தரப்பு
இந்தநிலையில், தற்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் உலகம் முழுவதும் அமைதியைக் கொண்டு வருகிறோம்.
நான் வெறும் பத்து மாதங்களில் எட்டுப் போர்களைச் சுலபமாக முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

இன்னும் சில உள்ளன, அதில் குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் மிகவும் சிக்கலானது.
நான்கு ஆண்டுகளைக் கடந்தும் போர் தொடர்கிறது, இதில் ஒரு தரப்பு மட்டும் அமைதியை விரும்பினால் போதாது.
ரஷ்யாவும், உக்ரைனும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அமைதிப் பேச்சு வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமெரிக்கத் தரப்பு தலைமையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே புதிய பேச்சு தொடங்கவுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |