இன்று முதல் இலங்கை மீது விதிக்கப்படும் புதிய வரிகள்
அமெரிக்கா விதித்த கட்டண வீதத்தை மேலும் குறைக்க பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் இன்று (07) முதல் நடைமுறைக்குக்கு வரவுள்ளது.
அதன்படி, நாட்டிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்று முதல் அமெரிக்கா 20 சதவீத வரி விதிக்கும்.
பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம்
பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரிகளை அறிமுகப்படுத்தியது, மேலும் இலங்கை மீது 44 சதவீத வரிவிதிக்கப்பட்டது.
அந்த வரிவீதம் அமுல்படுத்தப்பட்டால், அது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே நிவாரணம் பெற இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
அந்த விவாதங்களின் போது நாட்டின் பிரதிநிதிகள் 24 சதவீத உயர் வரி விகிதத்தைக் குறைப்பதில் வெற்றி பெற்றதால், இலங்கை மீது விதிக்கப்பட்ட வரி வீதம் 20 சதவீதமாகும்.
இருப்பினும், இந்த புதிய வரிக் கொள்கை கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதியால் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், அமெரிக்கா விதித்த வரி விகிதத்தை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா
