வரியை உயர்த்துவேன்: இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப்
ரஷ்யாவிடமிருந்து(russia) எண்ணெய் வாங்குவதை அடுத்து இந்தியா(india) மீது கணிசமாக வரி உயர்த்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) திங்கள்கிழமை(. 4) மிரட்டியுள்ளார்.
இன்று (04) தனது ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், அமெரிக்க ஜனாதிபதி இந்தியா, ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்குவது மட்டுமல்லாமல், திறந்த சந்தையில் பெரும் லாபத்திற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் உயிரிழப்பு கவலை கொள்ளாத இந்தியா
ரஷ்ய இராணுவ ஆட்சியால் உக்ரைனில் எத்தனை பேர் இறந்தாலும் தங்களுக்கு கவலையில்லை என்றும், அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் கட்டணங்களை இந்தியா கணிசமாக அதிகரிக்கும் என்றும் ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அவர் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதியின் இந்த மிரட்டல் வந்துள்ளது.
இருப்பினும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய இறக்குமதியை நிறுத்தத் தயாராக இல்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா
