ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் - துருக்கி அதிபர் திட்டவட்டம்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நோர்டிக் நாடுகளான பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.
இருநாடுகளும் விரைவில் இணைவதற்கான நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளன.
ரஷ்ய படையெடுப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள நேட்டோவில் இணையவுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தன. ஆனால் நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றால் அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்தநிலையில், நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடனின் நாடுகளுக்கு துருக்கி எப்போதும் ஆதரவு தராது என அந்த நாட்டு அரச தலைவர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், நேட்டோ விண்ணப்பம் தொடர்பாக தங்களை நம்ப வைப்பதற்காக சுவீடிஷ் மற்றும் பின்லாந்து பிரதிநிதிகள் தலைநகர் அங்காராவிற்கு வந்து தேவையில்லாமல் எங்களை சோர்வடைய வைக்கக்கூடாது. இந்த இருநாடுகளுக்கும் பயங்கரவாத அமைப்பு குறித்து தெளிவான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை இல்லாத போது எவ்வாறு அவர்களை நம்புவது?
சுவீடன் ஹேச்சரி என்ற பயங்கரவாத அமைப்பு. அவர்களது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் இருக்கின்றனர்.
இவ்வாறு துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
