இலங்கையின் முக்கிய பிராந்தியத்திற்கு உரிமைகோரும் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் (Madurai) நேற்று (22) இடம்பெற்றது.
குறித்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) உட்பட கட்சியின் உறுப்பினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கூட்டத்தில் விஜய் பலதரப்பட்ட அரசியல் கருத்துக்கள் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை (Sri Lanka) தொடர்பிலும் அவர் முக்கிய கருத்து ஒன்றை முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், இந்திய கடற்றொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாக்கப்படுவதாகவும் எனவே இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு தருமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கையை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) அவர் முன்வைத்திருந்தார்.
இவ்விடயம் தற்போது இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இலங்கையில் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அவரின் அரசியல் ஆதிக்கம், மாநாட்டின் முக்கிய கரு, இலங்கை மற்றும் இந்தியாவின் (India) அரசியல் நிலைப்பாடு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
