'துபாய் இஷாரா' வின் போதைப்பொருள் வலையமைப்பு: மூவர் கைது!
துபாயில் இருந்து இந்நாட்டின் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் 'துபாய் இஷார' என்ற முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்த மூன்று சந்தேகநபர்கள் இன்று (17.01.2026) காலை கம்பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
விநியோகம்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த ஹெரோயின் போதைப்பொருளை கம்பளை, நாவலப்பிட்டி, உலபனை, தொலுவ, கெலிஓயா, பேராதனை மற்றும் வெலிகல்ல போன்ற பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கம்பளையின் தொலுவ பகுதியில் இருவரும் கம்பளையின் மஹர பகுதியில் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கம்பளையின் அங்கம்மன மற்றும் துந்தெனிய பகுதிகளில் வசிக்கும் குறித்த சந்தேகநபர்களுக்கு கொழும்பில் இந்த போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 20 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |