யாழ் இணுவில் பகுதியில் இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Thulsi
மல்லாகம் மற்றும் மயிலணி பகுதிகளைச் சேர்ந்த இருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
இதன்போது அவர்களிடமிருந்து 9 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், மீட்கப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் காவல் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி