யாழ் இணுவில் பகுதியில் இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Thulsi
மல்லாகம் மற்றும் மயிலணி பகுதிகளைச் சேர்ந்த இருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
இதன்போது அவர்களிடமிருந்து 9 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், மீட்கப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் காவல் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி