வீடொன்றில் மீட்கப்பட்ட 2 சடலங்கள் - விசாரணையில் வெளியான தகவல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
Drugs
By Thulsi
திருத்த வேலைகள் இடம்பெற்று வருகின்ற வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சடலங்கள் தங்காலை - சீனிமோதர பகுதியில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் போது, வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் உடல்நலக்குறைவு
இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வு பரிசோதனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்