முல்லைத்தீவில் இரு கடற்றொழிலாளர்கள் மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம்
முல்லைத்தீவு – கல்லப்பாடு பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகத் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் இருவரும் கடந்த (02.05.2026) ஆம் திகதி காலை கல்லப்பாடு கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், காணாமல் போன கடற்றொழிலாளர்கள் எதிர்பார்த்தபடி கரைக்குத் திரும்பாததால், காணாமல் போனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேடுதல் நடவடிக்கைகளை
இதன்படி, குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் நேற்று முதல் சம்பந்தப்பட்ட கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இதுவரை தேடுதல் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில் மேலும் இன்று (04.05.2026) மீண்டும் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |