ஈராக் கடல் எல்லைக்குள் எண்ணெய் கப்பல்கள் மீது அதிரடி தாக்குதல்
ஈராக்கின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள உம் கஸ்ர் துறைமுகத்திலிருந்து மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற இரண்டு பாரிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன.
ஈராக் கடல் எல்லைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு (Remote-controlled boat) மூலம் இன்று (12) இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலால் இரண்டு கப்பல்களிலும் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்தில் வெளிநாட்டு மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேடுதல் பணிகள்
அத்துடன் தாக்குதலுக்குள்ளான கப்பல்களிலிருந்த 38 பணியாளர்களை ஈராக் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ள நிலையில் எஞ்சிய சிலரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தத் தாக்குதலானது ஈராக்கின் இறையாண்மையை மீறும் ஒரு கோழைத்தனமான செயல் என ஈராக் இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் சாத் மான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வதேச கடல்சார் விதிகளின்படி, இந்தச் செயலுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமையை ஈராக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |