யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Law and Order
By Theepan
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து 20 போத்தல் கசிப்பு யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடவடிக்கை
இந்த நிலையில், சந்தேக நபர்கள் அப்பகுதியில் நீண்டகாலமாக வியாபாரத்தில் ஈடுப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி