தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள் சிக்கினர்! தொடரும் விசாரணை
தொலைபேசி ஒலிபரப்புக் கோபுரங்களில் இருந்து கேபிள்களைத் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த 27 மற்றும் 34 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை ராகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், நேற்று (13) நடத்திய அதிரடி சோதனையின் போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ரத்துபஸ்வல மற்றும் கடவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட போது இவர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 922,750 ரூபாய் மதிப்புள்ள கேபிள்களை வெட்டித் திருடியமை கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்த திருடப்பட்ட கேபிள் பாகங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |