ரஷ்ய தலைநகர் மீது மீண்டும் ஆளில்லா விமான தாக்குதல்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Sumithiran
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள வணிக மையத்தை இலக்கு வைத்து ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 1 அதிகாலைவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
"மொஸ்கோவை அடைய முயற்சித்த போது பல ஆளில்லா விமாங்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை உறுதி செய்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு

இந்த தாக்குதலுக்கு பின்னர் மொஸ்கோ நகருக்கு அருகே புகை கிளம்பியதாகவும், வணிக மைய கட்டடத்தின் கண்ணாடிகள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதலை உறுதி செய்தது. மொத்தம் மூன்று ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமைச்சகம் கூறியது.
முன்னதாக ஜூலை 29-30 இரவு மொஸ்கோ நகர வணிக மையத்தின் கட்டிடத்தை ஆளில்லா விமானங்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி