அரசாங்கம் மகிந்தவிடம் மன்னிப்பு கோர வேண்டும்!
தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று (21.11.2025) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பணம் உகண்டாவில் இருப்பதாகவும், அவர்களின் குடும்பம் இந்த நாட்டை கொள்ளையடித்ததாகவும் கூறினர், 14 மாதங்கள் கடந்து விட்டது ஒன்றும் நடக்கவில்லை.இன்னும் 13 மாதங்கள் தருகிறோம். இவை அனைத்தையும் கண்டுபிடிக்கவில்லை எனில் மெதமுலனவுக்கு வந்து மகிந்தவிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த பேரணியில் திருடர்கள் எவரும் இருந்தால் பிடித்து சிறையில் அடையுங்கள்.
நாங்கள் ஒன்றும் கூறப் போவதில்லை. எதிர்ப்பு தெரிவிக்கவும் மாட்டோம். எனினும், திருடர்கள் எனும் போர்வையில் எதிரணியை கட்டுப்படுத்த நினைத்தால் அது நடைபெறாத காரியம்.
நாம் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிரானவர்கள் என ஜனாதிபதி கூறுகிறார்.
ஆனால் இன்று இந்த பேரணியில் அநேக பேச்சாளர்கள் பேசினர். யாருமே போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக பேசவில்லை” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்