உகண்டாவும் ராஜபக்சாக்களும்! வைரலாகிவரும் புகைப்படங்கள்!!
ராஜபக்சக்களை உகண்டா தேசத்துடன் தொடர்புபடுத்தி பல கதைகள் இலங்கையில் உலா வந்துகொண்டிருக்கின்றன.
ராஜபக்சக்கள் உகண்டாவுக்கு தப்பிச் செல்லத்தயாராகிவருவதாகவும், அங்கு வியாபாரங்களை அவர்கள் பினாமிகள் மூலம் உருவாக்கிவருவதாகவும் செய்திகள் மக்கள் மத்தியில்- குறிப்பாக போராட்டக்காரர்கள் மத்தியில் பரிமாறப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்கள் இதுபோன்ற பெரிய அளவிலான ஆதாரங்கள் இல்லாத செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றன.
உகண்டாவுக்கு, இலங்கையில் இருந்து டொலர்கள் கடத்தப்பட்டுள்ளதாக சமூக வளைத் தளங்களில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், 102 தொன் எடையுள்ள உகண்டா நாட்டின் நாணயத்தாள்களே சிறிலங்கன் விமானங்கள் ஊடாக உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிறிலங்கன் விமானசேவை நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியான பரபரப்பான சூழ்நிலையில் இலங்கையின் பிரதமர் மற்றும் அவரது மகன் போன்றோர் உகண்டா நாட்டுடன் தொடர்புபட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அப்படி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்ற சில புகைப்படங்களை இங்கே தருகின்றோம். (இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னணி, காலம் போன்றன பற்றிய தகவல்கள் தெரியாத நிலையில், இந்த புகைப்படங்கள் பற்றிய உண்மையான தகவல்களை மக்களிடம் கோரும் நோக்கத்தில் இந்தப் புகைப்படங்கள் இங்கு வெளியிடப்படுகின்றன).







