பிரித்தானிய தடையில் சிக்கப் போகும் இன்னும் பல முக்கிய புள்ளிகள் !
மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு முன்னாள் பிரதி அமைச்சருக்கு எதிராக பிரித்தானியா (United Kingdom) விதித்துள்ள தடையை போல இறுதி யுத்தத்தை வழி நடத்திய மேலும் பல அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகவும் தடை பிரப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் பிரிவு தலைவர் சென்.கந்தையா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) போன்றோர் பிரித்தானியாவிற்கு பயணிப்பார்களாக இருந்தால் இங்குள்ள சட்டத்தின் பிரகாரம் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதிகள் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலும் பிரித்தானியா நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
இதனை ஆழமாக கூறமுடியாவிட்டாலும், எதிர்காலத்தில் குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளதுடன் குறித்த பிரித்தானிய தடை, முன்னாள் அரசியல் தலைமைகளிள் எதிர்காலம், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போதைய இலங்கை அரசியலில் பிரித்தானியாவின் தாக்கம் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
