பெற்றதாயை கொலை செய்த மகள் -பிரித்தானிய காவல்துறை விடுத்த எச்சரிக்கை
பெற்ற தாயைக் கொலை செய்த மகள் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிவிட்டார். எனவே அவரிடம் யாரும் நெருங்கி பழகவேண்டாம் என பிரித்தானிய காவல்துறை அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தனது தாயான சூசன்னா என்பவரை மகளான லாரா கொலை செய்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டார்.
மனநல மருத்துவமனையில் அனுமதி

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை மனநல மருத்துவமனையில் அனுமதிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது
அதன்படி, Somersetஇலுள்ள மருத்துவமனை ஒன்றில் லாராவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், லாரா மருத்துவமனையிலிருந்து தப்பியோடிவிட்டார்.
காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவரும் நிலையில், பொதுமக்கள் அவரை நெருங்கவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
லாரா, நீண்ட தூரத்துக்கு நடந்தே செல்லும் திறன்கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.