அரசு ஊழியர்களுக்கு பிரித்தானிய அரசின் அதிரடி அறிவிப்பு
பிரித்தானியாவில், 50,000 அரசு ஊழியர்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், கெய்ர் ஸ்டார்மர் அரசு, சுமார் 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும், சேன்சலரான ரேச்சல் ரீவ்ஸும், 2030 ஆம் ஆண்டில் 50,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் செலவீனங்கள்
அதாவது, அரசின் செலவீனங்களை குறைக்கும் வகையில் 2030 இல் பத்து சதவிகித அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சேன்ஸலர் ரேச்சல் திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு இரண்டு பில்லியன் பவுண்டுகள் மிச்சமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது முழு நேர அரசுப் பணியாளர்களாக பணி செய்வோரின் எண்ணிக்கை 515,000 என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
