ரஷ்ய அணுமின் நிலையத்தை அதிர வைத்த உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாடமின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆலையின் ஆறு மின் அலகுகளுக்கு இடையில் பணியாளர்கள் நடமாடுவதற்குப் பயன்படுத்தப்படும் கூடத்தின் மீது இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
"நல்லவேளையாக, எந்த வெடிப்பும் ஏற்படவில்லை. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள அந்த ஆலையின், பிரிவு 3-இன் அணு உலை அறையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலேயே இந்தத் தாக்குதல் நிகழ்ந்தது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் முயற்சி
அத்தோடு, கடந்த வாரம் உக்ரேனியப் படைகள், அந்த ஆலையின் பயன்படுத்தப்பட்ட உலர் அணு எரிபொருள் சேமிப்புக் கிடங்கைத் தாக்க முயன்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Image Credit: Reuters
ஜூன் மாதம் ரஷ்ய குழுவினரால் பழுதுபார்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டாவது மின்பாதை மீண்டும் இணைக்கப்படாததால், தற்போது அந்த ஆலை 330-கிலோவோல்ட் கொண்ட ஒற்றை மின் செலுத்து பாதை வழியாக மின்சாரத்தைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரும்பாலான ஆலை ஊழியர்கள் வசிக்கும் அருகிலுள்ள எனர்ஹோதர் நகரம், சமீப நாட்களாக தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைச் சந்தித்து வருவதாகவும், இதனால் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |