ரஷ்யாவின் கொலைவெறித் தாக்குதல்- ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யா, உக்ரைன் நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோலை ரஷ்யா கைப்பற்றியதாக அறிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த உக்ரைன், தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி வருகிறது.
இந்நிலையில், மரியுபோலில் உள்ள அஸ்வோஸ்தால் உருக்கு ஆலையில் உக்ரைன் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உக்ரைனிய படைகளும் அந்த ஆலைக்குள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஷ்யா, உருக்கு ஆலையை குறி வைத்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மரியுபோல் நகரத்தின் மீதான ரஷ்ய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மரியுபோலில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும் பொருட்டு ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.
ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.