அதிகரிக்கும் ரஷ்யாவின் தாக்குதல் - 500,000 துருப்புக்கள் களத்தில் - எதிர்கொள்ளத் தயாராகும் உக்ரைன்!
இந்த மாத இறுதிக்குள் உக்ரைனின் மீது பாரிய தாக்குதல்கள் ரஷ்யாவினால் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
இதனை, உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யா உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்த மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை உக்ரைனில் இறக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
உக்ரைனின் மீது பாரிய தாக்குதல்
உக்ரைனில் 300,000 ரஷ்யா துருப்புகளை குவிக்கும் அறிவிப்பை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அண்மையில் வெளியிட்டிருந்தார், குறித்த எண்ணிக்கையில் உண்மை இல்லை, ரஷ்யா அதற்கு மேலதிகமாக 500,000 துருப்புகளை தற்போது இறக்கியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு டொன்பஸ் பிராந்தியத்தை கைப்பற்றியதாக அண்மையில் குறிப்பிட்ட ரஷ்யா, பக்மூத் நகரை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு போர் டாங்கிகள் மற்றும் தற்காப்பு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இணங்கிய நிலையில், போர் விமானங்களையும் அந்த நாடு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரஷ்யப் படைகளைத் தடுக்க போதுமான ஆயுத இருப்புக்கள் உள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோ மேலும் தெரிவித்தார்.