கீவ்விற்கு ஏன் வரவில்லை, போரைக் கண்டு அஞ்சுகின்றீர்கள்; நேருக்கு நேர் கேள்விக்கணைகளைத் தொடுத்த ஊடகவியலாளர்!
ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டில் வசிக்கும் அப்பாவி மக்களைக் கடுமையாக தாக்கி வருகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உக்ரைன் ஊடகவியலாளர் பிரித்தானிய பிரதமரிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக விவாதிப்பதற்காக போலாந்து நாட்டிற்குப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போலந்து நாட்டில் நடைபெற்ற விவதத்தின் போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிச் சென்ற பெண் ஊடகவியலாளர் டாரியா கலேனியுக், என்பவர் பொரிஸ் ஜோன்சனிடம் கண்ணீருடன் எழுப்பிய கேள்விகள் மனதை உருகியுள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் பெண் ஊடகவியலாளர் பொரிஸ் ஜோன்சனை நோக்கி, நீங்கள் கீவ்வுக்கு வரவில்லை, ஏனென்றால் நேட்டோ மூன்றாம் உலகப் போரை கண்டு பயப்படுகிறது. ஆனால் மூன்றாம் உலகப்போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
உக்ரைனில் உள்ள குழந்தைகள் குண்டு வெடிப்புக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் தற்போதைய உக்ரைன் மக்களின் நிலைமை எனக் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரித்தானிய பிரதமர், “நீங்கள் விரும்பும் வகையில் உதவுவதற்கு எங்களால் முடியவில்லை என்பதை நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவுடன் நேரடிப் போரில் ஈடுபட்டால் அதனுடைய பின் விளைவுகள் மிகப் பெரியளவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
"You're not coming to Kyiv ... because NATO is afraid of World War III, but it is already starting. And the Ukrainian children who are there taking the hit."
— CNN (@CNN) March 1, 2022
Ukrainian journalist @dkaleniuk made an emotional plea to British PM Boris Johnson during a press conference. pic.twitter.com/pn4QxwGumz