வாக்னர் கூலிப்படைத் தலைவர் உயிருடன்...! பகீர் கிளப்பும் ரஷ்ய நிபுணர்
விமான விபத்தில் இறந்ததாக கூறப்படும் எவ்ஜெனி பிரிகோஜின் தற்போது உயிருடன் இருப்பதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவராகவும் நம்பிக்கையானவராகவும் இருந்த எவ்ஜெனி பிரிகோஜின் பின்னர் அவருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்.
கட்டுப்பாட்டிற்குள் கிளர்ச்சி கொண்டு வரப்பட்டதனையடுத்து எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்து ஒன்றில் கொல்லப்பட்டார்.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பிரிகோஜினும் உள்ளடங்குவதாக ரஷ்யா DNA பரிசோதனை மூலம் உறுதி செய்தது.
பின்னணியில் புடின்

இந்த சம்பவத்தின் பின்னணியில் புடின் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்னர் கூலிப்படைத்தலைவரான பிரிகோஜின் உயிருடன் இருப்பதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்தது, பிரிகோஜின் உடைய டூப் என்றும், உண்மையில் பிரிகோஜின் உயிரிழக்கவில்லை என்றும், அவர் புடினைக் கொல்ல திட்டம் தீட்டி வருவதாகவும், ரஷ்ய நிபுணரான Valery Solovey என்பவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரிகோஜின் பயணித்ததாகக் கூறப்படும் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்றும், அது வெளியிலிருந்து தாக்கி வீழ்த்தப்பட்டது என்றும் கூறியுள்ள Solovey, அந்த விமானத்தில் பிரிகோஜின் இல்லை என்பது புடினுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பிரிகோஜின் எங்கிருக்கிறார் என்பதை, தான் அடுத்த மாதம் தெரிவிக்க இருப்பதாக கூறும் Solovey, அவர் ஆப்பிரிக்காவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.