ரஷ்ய போர் இயந்திரத்தை நிர்மூலமாக்க திட்டம்
உக்ரைன் ஆயுதப்படைகளும், பொதுமக்களும் காட்டும் எதிர்ப்பு என்பது "ரஷ்ய போர் இயந்திரத்தை அரைத்துத் தள்ளிவிடும்" என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் அலெக்ஸே அரஸ்டோவிச் கூறியுள்ளார்.
முகப்புத்தக பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“புடினின் படைகளை அரைத்து நொறுக்கி, இங்கே தான் புதைப்போம்.
ரஷ்ய இராணுவத்தை நாங்கள் வெற்றிகரமாகத் தடுப்பது ஒரு விபத்தோ, அதிருஷ்டமோ அல்ல. எமது வெற்றி ஒரு முறையில் நிகழ்த்தப்படுகிறது.
குறிப்பாக உருவாக்கப்பட்டு தெளிவாக செயற்படுத்தப்படும் காரண - விளைவு தொடர்பு அது.
ரஷ்ய இராணுவம் வலிமையானதல்ல. அது பெரியது - அவ்வளவே.
உக்ரைன் இராணுவமும், தலைமையும் எப்படி இந்தப் போரைக் கையாள்கின்றன என்பதைப் பார்த்து வெளிநாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இவ்வளவு பெரிய படையெடுப்பை எதிர்கொள்ள, திட்டமிட போதிய அவகாசம் இல்லாதபோதும் இத்தகைய வெற்றியை நாங்கள் பெறுகிறோம்.
புடினின் இராணுவத்தில் உள்ள 10இல் 8 பேர் இங்கே தான் இருக்கிறார்கள். இங்கே தான் அவர்கள் புதைக்கப்படுவார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
